காற்றில் சலசலக்கும்
தென்னங்கீற்றின் இலையோசை...
தூரத்தில் ஒலிக்கும்
குயிலின் இன்னிசை....
சுவாசத்தில் மிதந்து வரும்
முதற்மழையின் மண்வாசனை....
உன் நினைவுகளில் மூழ்கி இருக்கும்
என் இதய வாசலில் உன் வாசனை....
உடற் உரசி செல்லும் குளிர்க்காற்று....
உயிர் உரசி செல்லும் உன் நினைவுகள்.....
மாலைகதிரவனின் மஞ்சள் வெயில்
மயக்கும் மல்லி வாசத்தில் கலந்து நிற்கும் உன் நினைவுகள்...
தொட முடியா தொலைவில் நீ....
தொடும் தூரத்தில் எப்பொதும் உன் நினைவுகள்.....
நீ சென்ற திசை பார்த்து
தவம் இருக்கும் என் கண்கள்.....
நீ வரும் திசை நோக்கி
துடித்திருக்கும் என் இதயம்......
இந்த மாலைதனிமைகளில்
உன் நினைவுகள் சேர்த்து....
காத்திருக்கிறேன்.....
வருவாயா என் உயிரே...
3 comments:
Hello, Gud writings.....Continue ur work.....If possible, do keep n touch...tc
Hello Mr.selva...
Thank You For Visiting My Page....
Ur the First commenter of my blog.....
Thank Again...
soooooo touching lines.....realy good...
Post a Comment