♥♥♥♥♥
உன்னுடன்
பேச துடிக்கும்
என் இதழ்களில்
காணவில்லை
உனக்கான
என் வார்த்தைகளை...
தொண்டைக்கடியில்
சரிந்து விழுதனவோ...
உன்னை கண்டுவிட்ட
மயக்கத்தில்....
♥♥♥♥♥
கவிதையாய்
சொற்க்கள் சேர்த்து
கோர்வையாய்
வார்த்தைகள் தரித்து
இதமாய்
இதயத்தில் பதுக்கி
செதுக்கிறேன்
உனக்கான என் மொழிகளை...
நினைவுகளில்
உன்னை காணும்போது
முட்டி மோதி
முன்வரும் வார்த்தைகள்
நிஜமாய்
நீ வருகையில்
தயங்கி நின்று
பின் மறைகிறது
அது ஏனோ??
No comments:
Post a Comment