வெற்று காகிதங்களில்
கவிதைகள் வடித்தேன்
உனக்காக.....
கவிதை வரிகளில்
உன்னை சுமந்து...
உயிர்பெறுகின்றன...
புதிதாய் ஜனித்த
புது கர்வத்துடன்.....
உன் கைப்பிடியின்
ஸ்பரிசத்தில்
குழைகின்றன
வண்ணங்கள் ஏறி
வெட்கத்துடன்....
உன் கருவிழிக்குள்
விழுந்து
மிளிர்கின்றன...
புது மணப்பெண்ணின்
அழகுடன்.....
உன் இதழ்களுக்குள்
இணைந்து
கவி பாடுகின்றன
கோடைமழையின்
குதுகலத்துடன்....
உன் சுவாசகாற்றில்
நுழைந்து
உன் இதயத்துள்
நிலைக்கின்றன
நிறைவான
காதலுடன்....
பகல் இரவுகளை இரவல் வாங்கி
அல்லும் பகலும் உன் நினைவுகள் சுமந்து...
நித்திரை தொலைத்து...
கவி வடித்தவள் நான்.....
நீ ரசித்து வருடுவது
என் கவிதைகளையா??...
No comments:
Post a Comment